இரும்பு பெட்டி வெடித்ததில் மேலும் ஒருவர் பலி

2 months ago 15

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வடமலம்பட்டியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தவர் ஜெய்சங்கர்(42). இரவது உதவியாளராக திருப்பத்தூர் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த பிரகாஷ் (37) இருந்தார். நேற்று முன்தினம் மாலை டூவீலரில் வந்த 2 பேர் இரும்பு பெட்டியில் துளை போட்டு தருமாறு கொடுத்து சென்றனர். டிரில்லிங் மெஷின் மூலம் இரும்பு பெட்டியில் துளையிட்டபோது அது வெடித்து ஜெய்சங்கர் பலியானார். படுகாயம் அடைந்த பிரகாஷ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் நடத்திய விசாரணையில் வெடிபொருட்களுடன் இரும்பு பெட்டியை கொடுத்தவர்கள் ஜிம்மாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் சங்கர்(35), டிரைவர் மாரியப்பன் (40) என தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post இரும்பு பெட்டி வெடித்ததில் மேலும் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article