இரட்டை இலை சின்னம் வழக்கு: அதிமுக மறு ஆய்வு செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு

1 day ago 3

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி ஐகோர்ட்டில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகார வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூர்யமூர்த்தி என்பவரின் மனுவை 4 வாரங்களில் பரிசீலிப்பதாக ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்த நிலையில் இரட்டை இலை, உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

The post இரட்டை இலை சின்னம் வழக்கு: அதிமுக மறு ஆய்வு செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு appeared first on Dinakaran.

Read Entire Article