புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அதனை விசாரித்த நீதிமன்றம் அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது. மேலும் இதுதொடர்பாக எட்டு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் ஆணை பிறப்பித்திருந்தது.
இதே விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாக கொண்டு இந்திய தலைமை.தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனுதாரர் சூரியமூர்த்தி ஆகியோர் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
The post இரட்டை இலை சின்னம் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.