இன்ஸ்டாகிராமில் பழக்கமான வாலிபருடன் பைக்கில் சென்ற சிறுமி விபத்தில் பலி

2 months ago 11

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரம்- கண்மணி தம்பதியினரின் மகள் மோனிகா (15). இவர், சித்தோடு டெக்ஸ்வேலியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுனில் (27) என்பவருடன் சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபருடன் நேற்று பைக்கில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியை சுற்றிபார்க்க சென்றுள்ளார்.

அப்போது ஊசிமலை பர்கூர் மாட்டு இன ஆராய்ச்சி மையம் அருகே வளைவில் திரும்பும்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த மோனிகாவிற்கு கழுத்தில் பலத்த காயமும், சுனிலுக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி மோனிகா உயிரிழந்தார். சுனில், சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post இன்ஸ்டாகிராமில் பழக்கமான வாலிபருடன் பைக்கில் சென்ற சிறுமி விபத்தில் பலி appeared first on Dinakaran.

Read Entire Article