சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த ஒன்றிய அரசைக் கண்டித்து பிப்.8-ல் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலங்களுக்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் பலரும் பட்ஜெட்டுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த ஒன்றிய அரசைக் கண்டித்து பிப்.8-ல் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;
ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8(சனிக்கிழமை) அன்று மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி: ஒன்றிய அரசைக் கண்டித்து பிப்.8-ல் திமுக கண்டன பொதுக்கூட்டம்!! appeared first on Dinakaran.