இன்று பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல்-கூடூர் இடையே 25 மின்சார ரயில்கள் ரத்து:தெற்கு ரயில்வே அறிவிப்பு

2 hours ago 2

சென்னை, பிப்.13: பராமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையே 25 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மூர் மார்க்கெட் – சூலூர்பேட்டை இடையே காலை 8.35, 10.15, 12.10 மதியம் 1.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.00, 9.30, 10.30, 11.35 மணிக்கும், மறுமார்க்கமாக காலை 11.25, மதியம் 12.00, 1.00, 2.30, 3.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.40, 12.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், சூலூர் பேட்டை – நெல்லூர் இடையே பிற்பகல் 3.50 மணிக்கு மற்றும் மறுமார்க்கமாக 6.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி – தாம்பரம் இடையே பிற்பகல் 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post இன்று பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல்-கூடூர் இடையே 25 மின்சார ரயில்கள் ரத்து:தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article