இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மனைவி கொலை

3 days ago 7

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூரை சேர்ந்த இந்து முன்னணியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெகதீஷன் (38) , இவரது மனைவி கீதா (36) மற்றும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இவர் வழக்கம்போல இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் கையில் அரிவாளுடன் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து வெட்டியதில் கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இதில் ஜெகதீஷன் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டதால் அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜெகதீஷனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த கொலையை யார் செய்திருப்பார்கள்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article