இந்தில கவிதை சொல்லு..,மாணவரை அடித்த ஆசிரியை...பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

5 hours ago 2

சென்னை,

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை விடுவிக்க மாட்டோம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. பாஜகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறிய மாணவரை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பத்மலட்சுமி (வயது38  )என்பவர் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் 3வது வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு இந்தி கற்பதிலும், படிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்திருக்கின்றன.

இந்த சூழலில் 3வது வகுப்பு மாணவரை இந்தியில் கவிதை சொல்லுமாறு பத்மலட்சுமி கூறி இருக்கிறார். அப்போது அந்த மாணவர் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. இதனால் கோபடைந்த அந்த ஆசிரியை மாணவரை கடுமையாக அடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பள்ளிக்குள் விடமாட்டேன் என்றும் மிரட்டி தொடர்ந்து அடித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்தி ஆசிரியை மீது பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தி ஆசிரியை பத்மலட்சுமி சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்த சம்பவம் மக்களிடையே விவாதபொருளாக மாறி உள்ளது.

Read Entire Article