சென்னை: “இந்தியைத் திணித்தால் இன்னொரு மொழிப் போரை சந்திக்க தமிழகம் தயங்காது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்தார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் இண்டியா கூட்டணி சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.