சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம் என்று மெல்போர்னில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில், தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார்.