இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன், துணை கேப்டன் நியமனம்..?

4 hours ago 2

மும்பை,

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதனால் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் புதிய கேப்டனை தேடும் பணியில் பி.சி.சி.ஐ. இறங்கியுள்ளது. இதில் கேப்டன் பதவிக்கு சுப்மன் கில்லின் பெயர் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பண்ட்டின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ரோகித் சர்மாவுக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா அடிக்கடி காயத்தை சந்திப்பதால் அவருக்கு கேப்டன் பதவி வழங்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Read Entire Article