இந்திய டிரோன் தாக்குதலில் 7 பேர் பலி, 6 பேர் காயம்: பாக். அதிகாரிகள் ஒப்புதல்

3 hours ago 2

லாகூர் இந்தியா -பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமை பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் டிரோன் தாக்குதலில் 7 பேர் பலியானதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று ஒப்புக்கொண்டனர்.

பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘லாகூர், சினியோட், பாக்பட்டான், காரியன்,ஷேக்குபுரா மற்றும் ஜலாபூர் ஜட்டன் ஆகிய பகுதிகளில் இந்தியா டிரோன் தாக்குதலை நடத்தியது. இந்திய எல்லையையொட்டி கிராமங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் டிரோன் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர். லாகூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சாபின் ரஹீம் யார் கான் மாவட்டத்தில் உள்ள ஷேக் சயீத் சர்வதேச விமான தளத்தின் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது என்றனர்.

The post இந்திய டிரோன் தாக்குதலில் 7 பேர் பலி, 6 பேர் காயம்: பாக். அதிகாரிகள் ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article