மதுரை: “இந்தி எதிர்ப்பில் அண்ணாவிடம் இருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை” என்று பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: “புதிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தி திணிப்பு நடைபெறுவதாக திமுக கபட நாடகம் ஆடி வருகிறது. இந்தியா முழுவதும் மூன்றாவது மொழியாக இந்தி கற்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை. கேரளாவில் மும்மொழி கல்விக் கொள்கை அமலில் உள்ளது. தமிழக எல்லையில் கேரளா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. 50 ஆண்டுகளில் தமிழை விட மலையாளம் மொழி பலமடங்கு வளர்ந்துள்ளது.