“இணையத்தில் அடையாளங்களை மறைத்து பெண்களை ஏமாற்றுகின்றனர்” - சவுமியா அன்புமணி குற்றச்சாட்டு

5 hours ago 3

இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து, பெண்களை ஏமாற்றுகின்றனர் என்று பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 6-வது சர்வதேச மற்றும் 45-வது இந்திய குற்றவியல் மாநாட்டில் பங்கேற்ற பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, தகவல் தொழில்நுட்பத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியதாவது: பெண்கள் மீதான வன்கொடுமைகள் குறைவதாக இல்லை. பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு பெண்கள் உள்ளாகின்றனர். பொதுவெளி, கல்விக் கூடம், பணிபுரியும் இடம், ஏன் வீடுகளில்கூட பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

Read Entire Article