இலங்கை கடற்படை அட்டூழியம் - 32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

2 months ago 11

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 450 விசைப்படகுகளில் அனுமதி சீட்டு பெற்று சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை(பிப். 23) அதிகாலை மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேசுராஜா, வியாகுலம், ஜெயபிரகாஷ், ஆரோக்ய மண்ட்ரோ, கோபால் ஆகியோருக்குச் சொந்தமான ஐந்து விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் கைப்பற்றினர்.

Read Entire Article