கந்தர்வக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே தண்ணீர் லாரி உரிமையாளரை கொடூரமாக கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வீரடிப்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால்(50). இவர் தனக்கு சொந்தமான லாரியில் குடிநீர் ஏற்றி சென்று வீடு மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தார். இன்று காலை வீரடிப்பட்டியில் தண்ணீர் நிரப்பி கொண்டு கந்தர்வகோட்டை நோக்கி லாரியை ராஜகோபால் ஓட்டி வந்தார்.
கந்தர்வகோட்டை சாலையில் லாரி வந்தபோது 4 மர்ம நபர்கள் வழிமறித்தனர். இதனால் லாரியை நிறுத்தி விட்டு இறங்கிய ராஜகோபாலை 4 பேரும் சரமாரியாக தாக்கினர். பின்னர் ராஜகோபாலை கீழே தள்ளி விட்டு பெரிய கல்லை தூக்கி அவரது முகத்தில் போட்டனர். இதில் முகம் சிதைந்து அந்த இடத்திலேயே ராஜகோபால் இறந்தார். இதையடுத்து 4 ேபரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜகோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ராஜகோபால் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் வீரடிப்பட்டி பொதுமக்கள், ராஜகோபாலின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ராஜேந்திரனை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கல்லை போட்டு முகத்தை சிதைத்து தண்ணீர் லாரி உரிமையாளர் கொடூர கொலை: உறவினர்கள், மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.