இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: பும்ரா விலகல் ?

2 hours ago 1

நாக்பூர்,

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு  எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் 5 வாரங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெற்றிருந்தார். முதல் இரு ஆட்டங்களில் அவர் ஆடமாட்டார். உடல்தகுதியை பொறுத்து 3-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் வருண் சக்ரவர்த்தி சேர்ப்புக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட அணிப்பட்டியலில் பும்ரா பெயர் இடம் பெறவில்லை. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியது உறுதியாகியுள்ளது. 

Read Entire Article