ஆவின், ரயில்வேக்கு புதிய அதிகாரிகள் நியமனம் தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

2 months ago 7

சென்னை: தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு டிஜிபி ராஜீவ்குமார், ஆவின் விஜிலன்ஸ் இயக்குநராகவும், ஊர்க்காவல்படை இயக்குநராக இருந்த வன்னியப்பெருமாள், ரயில்வே ஏடிஜிபியாகவும், போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு பிரிவு ஐஜியாக இருந்த மல்லிகா, மாநில மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவு இயக்குநராகவும், ரயில்வே டிஐஜியாக இருந்த அபிஷேக் தீட்சித், பதவி உயர்வு பெற்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநராகவும், ஆவின் எஸ்பியாக இருந்த முத்தமிழ், சிவில் சப்ளை சிஐடி பிரிவு எஸ்பியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

The post ஆவின், ரயில்வேக்கு புதிய அதிகாரிகள் நியமனம் தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article