ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? - ஓய்வுபெற்ற நீதிபதி செலமேஸ்வர் கருத்து

1 month ago 15

சென்னை: “பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் பொதுமக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் போன்ற பொது ஊழியர்கள் தங்களது கடமையை செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் உள்ளது” என ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் நினைவு அறக்கட்டளை சார்பில் 4-ம் ஆண்டு நீதி மற்றும் சமத்துவத்துக்கான சொற்பொழிவு சென்னையில் நடந்தது. எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் பங்கேற்று பேசுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வேளையில் எதற்காக கொண்டாடுகிறோம்? என்ன சாதித்தோம்? என்பதை நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள இதுதான் சரியான தருணம்.

Read Entire Article