சென்னை: தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்து:
மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்: இதில் புதிய விஷயம் ஒன்றும் இல்லை. அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறதோ அதைத்தான் உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு தமிழக ஆளுநர் மட்டுமின்றி மற்ற மாநில ஆளுநர்களுக்கும் ஒரு கடிவாளம் போட்டுள்ளது. கூடிய விரைவில்’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஆளுநர்கள் இனி நாள் கணக்கில் கோப்புகளையும், மசோதாக்களையும் கிடப்பில் போட முடியாது.