ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் சமமாக பாவிக்க வேண்டும்: ஐகோர்ட்

4 months ago 14

சென்னை : ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பாமக கொள்கை பரப்பு செயலாளர் சேகர் தொடர்ந்த வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தரப்புக்கு ஒரு நாளில் அனுமதி அளிப்பதும், மற்றவர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல் இருப்பதும் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பாமக மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை வரும் ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் சமமாக பாவிக்க வேண்டும்: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article