ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வினியோகம்

3 months ago 9

ராமநாதபுரம், டிச.2: ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம் தலைமை வகித்தார்.

மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, நகர்மன்ற தலைவர் கார்மேகம், தமுமுக மாவட்ட, ஒன்றிய, கிளை, நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வினியோகம் appeared first on Dinakaran.

Read Entire Article