சென்னை: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கனடா நாட்டின் டிரான்ஸ்பார்மிங் கிளெஃப்ட் அமைப்பு இடையேயான கூட்டாண்மையின் 20-ம் ஆண்டு நிறைவு விழா, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாக்ஸ்டெமி அமைப்பின் தலைவரும், கல்விசார் உளவியலாளருமான மருத்துவர் எஸ்.சரண்யா டி.ஜெயக்குமார், மருத்துவ மையத்தில் உதடு, அண்ணப்பிளவு முகத்தாடை சீரமைப்புக்கான சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.