ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய கைதிக்கு ஸ்டான்லியில் சிகிச்சை

2 months ago 10

பூந்தமல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் செல்வராஜ் (50) என்பவர் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று திடீரென இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செல்வராஜுக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய கைதிக்கு ஸ்டான்லியில் சிகிச்சை appeared first on Dinakaran.

Read Entire Article