ஆம்ஸ்ட்ராங் கொலை: ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ்

3 months ago 17

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நாட்டு வெடிகுண்டு விநியோகித்த விவகாரத்தில் ரவுடி புதூர் அப்புவை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. 28வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரவுடி அப்பு மீதும் குண்டாஸ் பாய்ந்தது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை: ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article