ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் - இது கோவை நிலவரம்!

4 months ago 14

கோவை: பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, கோவையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு தொலைதூர வழித்தடங்களுக்கு 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தொடர் விடுமுறை வருகிறது. கோவையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பெரும்பாலான பொதுமக்கள் நேர வசதி, இருக்கை வசதி, இரவு ஏறினால் அதிகாலையில் சொந்த ஊரில் இறங்கிவிடலாம் என்பன போன்ற சாதகமான காரணங்களால் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

Read Entire Article