ஆபரேஷன் சிந்தூர் வைகோ வரவேற்பு

3 hours ago 4

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று அழைக்கப்படும் இத்தாக்குதல் மூலம் 9 தீவிரவாத தளங்கள இலக்குகளாக கொண்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிற பயங்கரவாதிகளுக்கு இந்திய அரசு பாடம் புகட்டி உள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, அதனால் அப்பாவி மக்கள் கொடும் துயரத்திற்கு ஆளாகும் நிலையை எந்த சூழ்நிலையிலும் இந்திய அரசு உருவாக்கிவிடக் கூடாது. போர் மூண்டால் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதையும் இந்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post ஆபரேஷன் சிந்தூர் வைகோ வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article