ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

9 hours ago 3

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சில்லாம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜா (வயது 35). டிரைவிங் பயிற்சி நிறுவனத்தில் டிரைவிங் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரூபாபதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

சின்னராஜா, கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டம் மூலம் தோல்வி அடைந்து ரூ.15 லட்சத்துக்கும் மேலாக கடனாளியாக மாறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் 2 தினங்களுக்கு முன் மன உளைச்சலில் வீட்டை விட்டு சின்னராஜா வெளியே சென்று விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே உசிலம்பட்டி அருகே சின்னராஜா ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article