ஆதனூரில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

2 weeks ago 2

பாடாலூர், ஜன.26: தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் சேர்க்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கிராம ஊராட்சிகளில் வீடியோ படக்காட்சிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட அரசு விழாக்களின் தொகுப்புகளை சிறு புகைப்படக் கண்காட்சிகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தில் நேற்று நடத்தப்பட்டது.

இக்கண்காட்சியில் முதலமைச்சர் , அமைச்சர் கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியினை சுமார் 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

The post ஆதனூரில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Read Entire Article