ஆட்சியில் பங்கு எண்ணம் மதிமுகவுக்கு கிடையாது: துரை வைகோ எம்பி பேட்டி

2 months ago 12

திருச்சி: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற எண்ணம் மதிமுகவுக்கு கிடையாது என்று துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 88ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு எம்பி துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: திருமாவளவன் தொடர்ந்து கூட்டணியில் தான் உள்ளேன் என்று கூறி வருகிறார். இந்தியா கூட்டணியில்தான் உள்ளோம் என்று நேற்றும் கூட (நேற்றுமுன்தினம்) அவர் தெரிவித்துள்ளார். எனவே அவர் கூட்டணியை விட்டு சென்று விடுவார் என கூற முடியாது. மதிமுகவை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற எண்ணம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post ஆட்சியில் பங்கு எண்ணம் மதிமுகவுக்கு கிடையாது: துரை வைகோ எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article