‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ - விஜய்யின் அறிவிப்புக்கு தலைவர்கள் கருத்து

3 months ago 12

சென்னை: விழுப்புரம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து அரசியல் கட்சியினர் தாங்கள் தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு: புஸ்ஸி ஆனந்த் பற்றி அதிக விஷயங்கள் வருகின்றன. அவர், புதுச்சேரியில் உள்ள பாஜக தலைவருடனும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனும் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கெனவே, பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தனர். அவர்வரவில்லை. அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

Read Entire Article