அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

2 weeks ago 4

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி இன்று காலை தொடங்கிவைக்கிறார். வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு, கார், டிராக்டர், ஆட்டோ, பைக், தங்கக் காசுகள் என விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரான மதுரையில் பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மிகவும் புகழ்பெற்றது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும், பாரம்பரியமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தனிச் சிறப்பும், வரவேற்பும் உண்டு.

Read Entire Article