சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.7,810க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.106க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பவுன் தங்கம் ரூ. 50 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் ரூ. 56 ஆயிரத்தை தாண்டியது. இந்த விலை உயர்வு நிற்காமல் தொடர்ந்து உயர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
கடந்த ஆண்டு இறுதியில் ரூ. 59 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரையிலான இடைப்பட்ட விலையிலேயே தங்கம் விலை காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் ரூ. 60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுவிடும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22ம் தேதி அந்த நிலையையும் எட்டியது. அன்றைய தினம் தங்கம் விலை பவுன் ரூ. 60,200க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் ஒன்றிய அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக தங்கம் விலை வழக்கத்திற்கு மாறாக தங்கம் விலை அதிகரித்ததை காணமுடிந்தது. வழக்கமாக கடந்த சில மாதங்களாக காலையில் என்ன விலையில் தங்கம் விற்கிறதோ? அதே விலை தான் மாலையிலும் நீடிக்கும். ஆனால் பட்ஜெட் தாக்கத்தின் காரணமாக மாறாக மாலையிலும் தங்கம் விலை அதிகரித்ததை காண முடிந்தது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,640க்கு விற்பனை..! appeared first on Dinakaran.