அறிவித்தால் ஆணையாக வேண்டும், அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

4 hours ago 2

சென்னை: அறிவித்தால் ஆணையாக வேண்டும், அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவில்; நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன். ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன். அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! “அதுதான் திராவிட மாடல் என அனைவர் மனதிலும் பதிய வேண்டும்!. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post அறிவித்தால் ஆணையாக வேண்டும், அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article