சென்னை: “திமுகவின் ஆலயமாக கருதப்படுகின்ற, அறிவாலயத்தை அண்ணாமலையால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அவரால் எப்படி அதன் செங்கல் கற்களை அகற்ற முடியும். இரும்பு மனிதரான தமிழக முதல்வர் தொட்டு, 75 ஆண்டுகளைக் கடந்த இந்த திமுக-வை அசைத்துப் பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வரவேண்டும்.” என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று (பிப்.13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் பிடுங்காமல் விடமாட்டேன்” என்று பேசியிருந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.