![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39261136-barathi33.webp)
சென்னை,
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.பாரதியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில்,
செய்தியாளர்: தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்ந்தே தீரும் என்று அண்ணாமலை கூறி இருக்கிறாரே?
ஆர்.எஸ். பாரதி: அது அவரது கற்பனை.
செய்தியாளர்: சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் திமுக குறித்து பேசுகையில் அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுத்துவிட்டுத்தான் போவேன் என கூறி உள்ளாரே?
ஆர்.எஸ்.பாரதி: அறிவாலயத்தில் இருக்கும் ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது. அது நடக்கவே நடக்காது.
செய்தியாளர்: அதிமுக பற்றி...
ஆர்.எஸ்,பாரதி: அதிமுகவை பற்றி கேட்க வேண்டாம் ஏன் என்றால் அவர்களே பாவம். நெருக்கடியில் இருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் யாரை பற்றியும் நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை.
செய்தியாளர்: நடிகர் விஜய்க்கு 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிக்கை கொடுத்துள்ளாரே?
ஆர்.எஸ்.பாரதி: வாக்கு வங்கி குறித்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை. பிரசாந்த் கிஷோரே பீகாரில் டெபாசிட் வாங்கவில்லை என்றார்.