புதுடெல்லி: தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநில அறநிலையத் துறை சட்டங்களின் செல்லுபடித் தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைத்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை நாட உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு மறைந்த சுவாமி தயானந்த சுவாமி, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் பலர் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959, புதுச்சேரி சட்டம் 1932, ஆந்திரா மற்றும் தெலங்கானா அறநிலையத் துறை சட்டம் 1987 ஆகியவற்றின் அரசியல் சாசன செல்லுபடி தன்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.