அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட அரும்பாக்கம் இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வில்லிவாக்கம் அல்லது வேலங்காடு மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-103க்குட்பட்ட அரும்பாக்கம் இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், 09.05.2025 முதல் 31.05.2025 வரை மேற்கண்ட மயானபூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது.
எனவே, மேற்கண்ட மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வில்லிவாக்கம் அல்லது வேலங்காடு மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
The post அரும்பாக்கம் இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடை வரும் 31ம் தேதி வரை இயங்காது appeared first on Dinakaran.