அரசு மருத்துவர்கள் நியமனத்தில் அரசின் மெத்தன போக்கால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

4 days ago 2

மருத்துவர்கள் நியமனத்தில் திமுக அரசு காட்டும் மெத்தனப்போக்கால் மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு 4 மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் அங்குள்ள செவிலியர்கள் மருத்துவம் பார்த்துள்ளனர். சிறிது நேரம் கழித்து பனிக்குடம் உடைந்துவிட்டதாகக் கூறி கர்ப்பிணியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வழியிலேயே கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

Read Entire Article