நரசிங்கபுரம், பிப்.22: மதுரை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் மகன் பிரேம் ஜோசப்(51). கார் டிரைவரான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் பிரேம் ஜோசப், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சாத்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது, இரவு நேரமாகிவிட்டதால் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய பிரேம் ஜோசப், நேற்று காலை 6 மணியளவில் எழுந்து பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பின்னோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியதில் தடுமாறி விழுந்தார். தொடர்ந்து பஸ் சக்கரம் ஏறியதில் கை முறிந்து படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சைக்கு பின்பு மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரசு பஸ் சக்கரம் ஏறியதில் கார் டிரைவர் கை முறிந்தது appeared first on Dinakaran.