ஜெயங்கொண்டம், டிச.5: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன். இவன் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், இவரை பனிரெண்டாம் வகுப்பு பயிலும் சிறுவன் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post அரசு பள்ளியில் மாணவர்களுக்குள் தகராறு appeared first on Dinakaran.