அரசனூர், இடையமேலூரில் நாளை மின் நிறுத்தம்

2 months ago 8

சிவகங்கை, நவ.21: சிவகங்கை அருகே அரசனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், பில்லூர், களத்தூர் உட்பட இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு நாளை காலை 9மணியில் இருந்து மாலை 5மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுபோல் இடையமேலூர் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் தமறாக்கி, குமாரபட்டி, கண்டாங்கிபட்டி, மலம்பட்டி, பாப்பாகுடி, இடையமேலூர், சாலூர், கூட்டுறவுபட்டி, மேலப்பூங்குடி, தேவன்கோட்டை, வில்லிபட்டி, கன்னிமார்பட்டி, ஒக்குபட்டி உள்ளிட்ட இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு நாளை காலை 10மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

The post அரசனூர், இடையமேலூரில் நாளை மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article