அய்யனார் கோயிலில் பூஜைகள் நடத்த கோரி மனு

4 months ago 15

 

சிவகங்கை, ஜன.5: திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் தடங்கலின்றி முறையாக பூஜைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மனுவில் கூறியிருப்பதாவது: ஆ.தெக்கூர் கிராமக்கோவிலாக பச்சை மூங்கிலுடைய அய்யனார் கோவில் உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த இக்கோவிலுக்கு மன்னர் காலத்தில் மானியமாக அளிக்கப்பட்ட நிலங்கள் உள்ளன. இந்நிலையில், கோவில் நிலங்கள் பூசாரியின் பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்ததால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சார்பில் கோவில் பெயரில் நிலங்கை மீண்டும் பட்டா மாற்றம் செய்யக்கோரி கடந்த 2ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணப்பித்தனர்.

அதற்கான நடவடிக்கைகளில் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகமும், வருவாய்த் துறையும் மேற்கொண்டு பட்டாவை கோவில் பெயருக்கு மாற்றம் செய்தனர். இப்பிரச்னை காரணமாக கோவிலில் பூஜைகள் சரிவர நடைபெறுவதில்லை. இந்நிலையில், பொங்கல் விழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் தற்போது நடைபெறவுள்ள நிலையில், கோவில் பூஜைகளை முறையாக செய்ய வேண்டும். அறநிலையத்துறை சார்பில் கோயிலுக்கு தனி மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post அய்யனார் கோயிலில் பூஜைகள் நடத்த கோரி மனு appeared first on Dinakaran.

Read Entire Article