*அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
அம்பை : அம்பை. கலைக்கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் ரூ.12.68 கோடியில் 6754 பயனாளிகளுக்கு குடியிருப்போருக்கான பட்டா, இலவச வீட்டுமனை பட்டா, நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா வரவேற்றார்.
விழாவில் சபாநாயகர் அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் பங்கேற்று 6 ஆயிரத்து 754 பயனாளிகளுக்கு ரூ.12.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை சார்பில் 258 பயனாளிகளுக்கு இ.பட்டாக்களும், ரூ.2.77 கோடியில் 187 பயனாளிகளுக்கு வரன் முறை பட்டாக்களும், பட்டா மாற்றம் 868 பயனாளிகளுக்கும், ரூ.2.52 கோடியில் 172 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், 4 ஆயிரத்து 823 பயனாளிகளுக்கு நகர நிலவரி திட்டத்தின் கீழ் பட்டாக்களும் வழங்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.35 ஆயிரத்து 500 மதிப்பில் 5 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகளும், ரூ.56 ஆயிரத்தில் 10 பயனாளிகளுக்கு
தையல் இயந்திரங்களும், 50 பயனாளிகளுக்கு சீர்மரபினர் அடையாள அட்டைகளும், மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.29 லட்சத்தில் 24 பயனாளிகளுக்கு கடனுதவிகளும், 13 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்தில் கலைஞர் கைவினை திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.6.26 கோடியில் 202 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.8.40 லட்சத்தில் 8 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர்களும், ஆதிதிராவிடர் வீட்டு வசதி வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.30.62 லட்சத்தில் 14 பயனாளிகளுக்கு சிற்றுந்து வாகனம், சரக்கு வாகனம், தொழில் கடனுதவிகளும், ரூ.4.50 லட்சத்தில் 9 பயனாளிகளுக்கு கறவை மாடு கடனுதவிகளும் வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்தில் உதவிகளும், தூய்மை பணியாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளும், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ரூ.10 லட்சத்தில் வாகைகுளம் ஊராட்சி சுய உதவிக்குழு கடனுதவிகளும், வேளாண்மைத்துறை சார்பில் ரூ.1,848 மதிப்பில் 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், எம்எல்ஏக்கள் அப்துல்வஹாப், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் பிரபாகரன், முன்னாள் எம்பி ஞானதிரவியம், பேச்சிபாண்டியன், அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகரபாண்டியன், யூனியன் சேர்மன்கள் அம்பை பரணி சேகர், சேரன்மகாதேவி பூங்கோதை சீவல முத்துக்குமார், நகராட்சி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், அரசு வழக்கறிஞர் காந்திமதிநாதன், விகேபுரம் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கிபாண்டியன், விகேபுரம் நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன்,
முத்துப்பாண்டி, முத்துகிருஷ்ணன், அம்பை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், காசிநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராதாகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி, மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் தினகர், முன்னாள் கவுன்சிலர் மகேஷ்வரன் உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், திமுகவினர் உள்பட பலர் பங்கேற்றனர். அம்பை தாசில்தார் வைகுண்டராமன் நன்றி கூறினார்.
The post அம்பையில் 6,754 பயனாளிகளுக்கு ரூ.12.68 கோடியில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.