அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

6 months ago 15

நாகர்கோவில், நவ.15: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஆதி திராவிட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர். ஆதி திராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்து கொண்டு அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான விருது திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட உள்ளது. அம்பேத்கர் தமிழ்நாடு அரசின் விருது பெற விரும்புவோர் தங்களை பற்றி முழு விபரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை 22.11.2024-க்குள் கன்னியாகுமரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை கன்னியாகுமரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article