அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்: ஜன.27க்கு விசாரணை ஒத்தி வைப்பு

4 months ago 13

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்குகள் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுவதாகவும், அதேபோன்று அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரியும் ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஒரு தகவலை தெரிவித்தார். அதில், ‘‘நான் வழக்கறிஞராக பணியாற்றிய போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவருக்காக ஆஜராகி வாதங்களை முன்வைத்துள்ளேன். எனவே இந்த வழக்கை நான் விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே விசாரணையில் இருந்து விலகி கொள்கிறேன். அதேநேரத்தில் இந்த வழக்கை வேறு ஒரு புதிய அமர்வில் பட்டியலிட்டு விசாரிக்கவும் பரிந்துரை செய்கிறேன்” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்: ஜன.27க்கு விசாரணை ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article