சென்னை: அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரும் அளவுக்கு அவர்கள் தீவிரவாதிகளா? கொலை பாதகர்களா? என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;
“டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா?
அவர்கள் எல்லாருமே குஜராத் ராஜஸ்தான் ஹரியானாவை சேர்ந்தவர்கள். ஆனாலும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு இரத்தம் கொதிக்கிறது.
ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள்.
இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே ?
இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே!
இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களை போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?
அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு கிடையாதா !? ஒரு கண்டனம்…கொஞ்சம் எதிர்ப்பு…அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அது கூடவா முடியாது? ” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
The post அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரும் அளவுக்கு அவர்கள் தீவிரவாதிகளா? கொலை பாதகர்களா? – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா காட்டம் appeared first on Dinakaran.