சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு இன்று (ஜனவரி 31) வருவதை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி உரையாற்றிய போது, அம்பேத்கரை மிக இழிவாகப் பேசியதுடன், காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளையும் கூறியிருந்தார்.