சென்னை: பிளிப்கார்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறி 10 ஆயிரத்து 601 கோடி ரூபாய் நேரடி அந்நிய முதலீட்டை பெற்றது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்கமளிக்கும் படி பிளிப்கார்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், பங்குதாரர்களுக்கு அமலாக்கத் துறை கடந்த 2021ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து, பிளிப்கார்ட் நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சவுந்தர், நோட்டீசுக்கு பதிலளிக்காமல் நீதிமன்றத்தை அணுகி இருக்க கூடாது என்ற அமலாக்கத் துறை வாதத்தை ஏற்று வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.அமலாக்கத் துறை நோட்டீசுக்கு 30 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு பிளிப்கார்ட் உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
The post அமலாக்கத்துறை நோட்டீஸ் எதிர்த்து பிளிப்கார்ட் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.