அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.பி.யுடன் சந்திப்பு

4 months ago 12

தக்கலை, ஜன.11 : குமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலினை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எம்.ஏ.கான் தலைமையில் பொதுச் செயலாளர் ஜிஎம்எஸ். ஷபீக், பொருளாளர் வி.கே. மைதீன், துணைச் செயலாளர் நாசர், மாவட்ட கல்விக் குழு கன்வீனர் அப்துல் லத்தீப், கோட்டார் அரிப்பு தெரு ஜமாஅத் தலைவர் சுகார்னோ, வடசேரி ஜமாத் தலைவர் சம்சுதீன், கோட்டார் இளங்கடை ஜமாத் தலைவர் குய்யாப்பா ஆகியோர் எஸ்.பியை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

The post அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.பி.யுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article